அதேவேளை. எதிர்வரும் 14 நாட்களுக்கு வைரஸ் கடுமையாகப் பரவக் கூடிய காலம் என்றும் இதனால் மேலும் இரு வரங்கள் மக்கள் வீடுகளில் இருக்க வேண்டுமெனவும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராடசி தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் எதனையும் ஊடகங்களில் வெளியிட வேண்டாமென்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள், கிராமங்களுக்குள் வெளியில் இருந்து எவரும் செல்ல முடியாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுளதென்றும் அவர் கூறினார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை. கன்டி ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் நாளைக் காலை ஆறு மணிக்குத் தளர்த்தப்பட்டு பிற்பகல் நான்கு மணிக்கு மீண்டும் அமுல்லப்படுத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கொனோரா வைரஸ் தொற்றுத் தொடர்பான பாதகாப்பு ஏற்பாடுகளில் அரசியல் இருப்பதாக பிரதான கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஆலோசனைகள் எதனையும் ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ச செவிமடுக்கவில்லை என்றும் அரசாங்கம் தன்னிச்சினையாகச் செயற்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார்.
அனைத்துக் கட்சிகளின் மாநாட்டில் பயன் இல்லையென முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.