வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் குணமடைந்து வருகின்றனர். பாரிய தாக்கம் எவருக்கும் இல்லை. புதிதாக எவரும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக இனம் காணப்படவில்லை என்றும் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறினார்.
வைரஸ் தொற்று இல்லாத இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்குமானால் இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நடைமுறையில் தளர்வுகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
அதேவேளை, கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் புதிதாக எவரக்கும் தொற்று ஏற்படவில்லை என்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு. திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பாரிய அளவில் கொரோனா தொற்று ஏற்படவில்லை. அம்பாறை அக்கரைப்பற்றுப் பி;ரதேசத்தில் மாத்திரம் கடந்த வாரம் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குறித்த அந்தப் பிரதேசம் மாத்திரமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
வடமாகாணத்திலும் மன்னார் தாரபுரம் கிராமத்தைத் தவிர மன்னாரில் வேறு எந்தப் பகுதியிலும் தொற்று ஏற்படவில்லை. முல்லைத்தீவு, கிளிநொச்சி. வவனியா ஆகிய மாவட்டங்களிலும் வைரஸ் தொற்று எவருக்கும் ஏற்படவில்லை.