இதேவேளை ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி வரை அரச மற்றும் தனியார் துறையினர் வீட்டில் இருந்தவாறே பணிபுரிய வேண்டும் எனவும் அரசாங்கம் கேட்டுள்ளது.
அதேவேளை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைத்தவிh மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் முற்று முழுதாக ஊரடங்குச் சட்டத்தை தளாத்த முடியுமென சுகாதார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்த முடியுமென சுகாதார சேவைப் பணியாளர்கள், மருத்துவர்கள் ஆகியோரின் ஆலோசனையுடன் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்ட அரசாங்க அதிபர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.