இந்த எண்ணிக்கையோடு யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் ஏற்கனவே தனிமைப்படுத்தல் நிலையங்ளில் இருந்தவர்களுக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக எவருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்று சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இன்று 24 பேருக்கான கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 14 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்.
சுவிஸ்லாந்து நாட்டில் இருந்து வருகை தந்த போதகர் ஒருவருடன் கூடிய அளவில் தொடர்பில் இருந்த 20 பேர் பலாலிப் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் ஆறு பேருக்கு ஏற்கனவே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை எஞ்சியிருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லையென்றும் ஏற்கனவே தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு தடுத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த மக்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனைவிட வேறு பிரதேசங்களில் இருந்து புதிதாக எவரும் தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் அவா் மேலும் கூறினார்.