இதனால் அவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். அதில் ஒருவர் இரவு கைது செய்யப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். காயமடைந்த 29 பேரும் வரக்காபொல வைத்தியசாலையில் தனியான சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையின் குறித்த பகுதிக்கு எவரும் செல்ல முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த சிலர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுத் தனியான சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வரக்காபொல நகரில் இருந்து கொழும்பு நோக்கி மரக்கறி வகைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றுடனேயே குறித்த பேருந்து நேருக்கு நேராக மோதியுள்ளது. லொறியின் சாரதியே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றியதாகச் சந்தேகிக்கப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற இலங்கைக் கடற்படையின் பேருந்து விபத்துக்குள்ளானமை தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தின் சுகாதா அமைச்சர் பவித்திர வன்னியாராட்சி இலங்கைப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற வரக்காபொல நகரின் பிரதான வீதியில் அவசரவ அவசரமாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.