கொரோனா வைரஸ் தாக்கம்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாதெனக் கூறப்பட்ட போதும் ஏற்க விரும்பாத கோட்டாபய

20 ஆம் திகதி கலந்துரையாடல்
பதிப்பு: 2020 ஏப். 17 14:42
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 18 22:39
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் மே மாத இறுதியில் நடத்த இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபசக்ச முற்படுகின்றார். ஆனால் தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லையென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை மருத்துவர் சங்கம் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட மகிந்த தேசப்பிரிய எதிர்வரும் 20 ஆம் திகதி அரசாங்கத்தின் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் மருத்துவர் சங்கப் பிரதிநிதிகளோடு கலந்துரையாடவுள்ளதாக அறவித்துள்ளார்.
 
மே மாதம் தேர்தலை நடத்த முடியாதென இலங்கைச் சுயாதீனத் Nதுர்தல்கள் ஆணைக்குழு கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனாலும் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனைகள் எதுவுமேயின்றித் தேர்தலை நடத்தத் திட்டமிடப்படுவதாக மகிந்த தேசப்பிரிய கூறினார்.

20 ஆம் திகதி இடம்பெறவுள்ள சந்திப்பின் பின்னர் தேர்தல் தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை இலங்கைச் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு வெளியிடும் எனவும் அவர் கூறினார்.

19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் நடத்தப்படுவதற்கான திகதியை சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவே அறிவிக்க வேண்டும். ஆனால் கோட்டாபய ராஜபக்ச தலையிடுவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.