அத்துடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிப்பது தொடர்பாக தனக்கே எதவும் தெரியாதென தனது முகநூலில் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் யூன் மாதம் தேர்தல் நடத்த எடுக்கப்பட்ட முடிவுக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்படலாம் எனவும் தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைக்குமாறு கோரப்படவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தாக்கம் கொழும்பில் அதிகரித்துச் செல்லும் நிலையில் தேர்தலை யூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த முடியாதென அறிவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக மற்றுமொரு தகவல் கூறுகின்றது.
இதேவேளை, தேர்தலை மேலும் பிற்போடுவதற்குரிய வாய்ப்புகள் இருப்பதாக சுயாதீன ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.