முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் எவரும் உள்ளே வரமுடியாமல் தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் இதுவரை தொற்றியில்லாத மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்படுவது நியாயமான செயற்படல்ல.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் தொற்றில்லாத மக்களுக்கும் தொற்றினை ஏற்படுத்தி அமைதியை குலைக்கும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.
எனவே இவ்விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுப்பதுடன் சந்தேகத்திற்கு இடமானவர்களை அந்தந்த மாவட்டங்களுக்குள்ளேயே தனிமைப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இந்தன் உண்மை நிலைமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் பகிரங்கமாகப் பதிலளிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.