கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்தி இயல்பு வாழ்க்கையைப் படிப்படியாகக் கொண்டு வருவது தொடர்பாகவும் உரையாடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அதேவேளை, சந்திப்பு முடிவடைந்த பின்னர் இன்று மாலை மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் சந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுது;தினர்; கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளம் பிரதேசத்தில் 300 ஏக்கர் காணியும், ஜெயந்திபுரம் பிரதேசத்தில் 200 ஏக்கர் நிலமும் பொதுமக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகள் தொடர்பாகக் கவனம் எடுப்பதாக மகிந்த ராஜபக்ச உத்தரவாதமளித்தாரென்று கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.