ராஜகிரிய பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவரும் முகத்துவாரம், மற்றும் கொல்லன்னாவை சாலமுல்ல பிரதேசங்களில் இரண்டு பேரும் இன்று செவ்வாய்க்கிழமை புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மட்டக்குழிய முகத்துவாரம் பிரதேசத்தில் 62 வயதான பெண் உயிரிழந்ததையடுத்து இந்த பெண்ணுடன் தொடர்பு கொண்டிருந்த ஆயிரத்து 200 பேர் தனிடைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 11 ஆம் திகதி ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த முடியாதென சுகாதாரப் பரிசோதகர்களும் கூறியுள்ளனர்.
இதனால் கொழும்பில் மக்களிடையே பதற்றமானதொரு நிலை ஏற்பட்டுள்ளது. வடக்குக் கிழக்கு உள்ளிட்ட ஏனைய மாகாணங்கள் 11 ஆம் திகதி முதல் வழமைக்குத் திரும்புமென கூறப்படுகின்றது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை இன்று வரை 765 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.