முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெறும் என நினைவுகூரல் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட இலங்கைப் பொலிஸ் அதிகாரிகள் தங்களை அழைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாகக் கேட்டதாகவும் அருட்தந்தை தெரிவித்தார். நிகழ்வுகள் தொடர்hக தாங்கள் விளக்கமளித்ததாகவும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் பாதுகாப்புத் திட்டத்திற்கு அமைவாக நிகழ்வுகள் இடம்பெறும் என்றும் அக வணக்க நிகழ்வுகளின் பின்னர் கொள்கைப் பிரகடணம் ஒன்று வெளியிடப்படவுள்ளதாகவும் அருட்தந்தை தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலும் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. மட்டக்களப்பு. அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நிகழ்வுகள் இடம்பெறும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகோரவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ;.