இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றக் கலைப்பு விவகாரம்-

ஐக்கிய தேசியக் கட்சியும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

அரச வர்த்தமானி அறிவிப்பை ரத்துச் செய்யுமாறு கோரிக்கை
பதிப்பு: 2020 மே 21 23:25
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 21 23:36
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#parliament
#election
நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலைத்தமை தொடர்பான அரச வர்த்த மானியை சட்ட வலுவற்றதாக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சி இன்று வியாழக்கிழமை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. ஜீன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்த அரச வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எட்டு அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றில் இன்று நான்கவது நாள்களாகவும் இடம்பெற்று வரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவன்ச இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
 
தேர்தலை யூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த முடியாதெனக் குறிப்பிட்டு இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றுப் புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணி சாலி பீஸ் மூலமாகக் கடிதம் ஒன்றைக் கையளித்திருந்தது.

குறித்த எட்டு மனுக்கள் மீதான விசாரணை நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் நடைபெறவுள்ளது. இன்று இடம்பெற்ற விவாத்தில் அரசதரப்புச் சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தனது வாதங்களை முன்வைத்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட் முடிhயதென்றும் அவர் தனது வாதத்தில் கூறியிருந்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தவறு என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படாதென்றும் தேர்தல் நடைபெறுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜபக்ச கூறியதாக அமைச்சரொருவர் கூறினார்.