தேர்தலை யூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த முடியாதெனக் குறிப்பிட்டு இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றுப் புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணி சாலி பீஸ் மூலமாகக் கடிதம் ஒன்றைக் கையளித்திருந்தது.
குறித்த எட்டு மனுக்கள் மீதான விசாரணை நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் நடைபெறவுள்ளது. இன்று இடம்பெற்ற விவாத்தில் அரசதரப்புச் சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தனது வாதங்களை முன்வைத்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட் முடிhயதென்றும் அவர் தனது வாதத்தில் கூறியிருந்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தவறு என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படாதென்றும் தேர்தல் நடைபெறுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜபக்ச கூறியதாக அமைச்சரொருவர் கூறினார்.