தேர்தலை நடத்தும் திகதி தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பரிய அரசாங்கத்துடன் ஆலோசித்துள்ளாரெனவும் பிரதான அரசியல் கட்சிகளோடும் பேசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தேர்தலைக் கண்காணிக்க சர்வதேசக் கண்காணிப்பர்களை வரவழைப்பது தொடர்பாக அரசாங்கம் உட்ப தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளோடும் மகிந்த தேசப்பிரிய கலந்துரையாடவுள்ளார். சர்வதேசக் கண்காணிப்பாளர்களை அழைக்குமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும் என்று கூறிய அவர், தேர்தலில் போட்டியிடும் சில அரசியல் கட்சிகள் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் கூறினார்.
தெற்காசி நாடுகளின் கண்காணிப்பாளர்களையே அழைக்குமாறு அரசாங்கம் ஆலோசனை வழங்கியதாக ஆணைக்குழுவின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்பாளர்களையும் வரவழைக்க வேண்டுமென பிரதான அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, சர்வதேசக் கண்காணிப்பாளர்களை அழைப்பது தொடர்பாக இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லையென மகிந்த தேசப்பிரிய போட்டியிடும் சில கட்சிகளின் பிரதிநிதிகளிடம் சொன்னதாகவும் உள்ளகத் தகவல் ஒன்று கூறுகிறது.