இலங்கை ஒற்றையாட்சி அரசின்

நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படுவார்களா?

முடிவு இல்லையென்கிறார் மகிந்த தேசப்பிரிய
பதிப்பு: 2020 ஜூன் 07 22:42
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 07 22:53
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இரண்டாம்வரத்தில் வரவுள்ள சனிக்கிழமை நடைபெறுமென இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் கூறுகின்றன. தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனாலும் இன்னும் சில நாட்களுக்குள் திகதி அறிவிக்கப்பட்டு வடும் என்றும் ஓகஸ்ட் மாத நடுப் பகுதியிலேயே தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
 
தேர்தலை நடத்தும் திகதி தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பரிய அரசாங்கத்துடன் ஆலோசித்துள்ளாரெனவும் பிரதான அரசியல் கட்சிகளோடும் பேசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தேர்தலைக் கண்காணிக்க சர்வதேசக் கண்காணிப்பர்களை வரவழைப்பது தொடர்பாக அரசாங்கம் உட்ப தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளோடும் மகிந்த தேசப்பிரிய கலந்துரையாடவுள்ளார். சர்வதேசக் கண்காணிப்பாளர்களை அழைக்குமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும் என்று கூறிய அவர், தேர்தலில் போட்டியிடும் சில அரசியல் கட்சிகள் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் கூறினார்.

தெற்காசி நாடுகளின் கண்காணிப்பாளர்களையே அழைக்குமாறு அரசாங்கம் ஆலோசனை வழங்கியதாக ஆணைக்குழுவின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்பாளர்களையும் வரவழைக்க வேண்டுமென பிரதான அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, சர்வதேசக் கண்காணிப்பாளர்களை அழைப்பது தொடர்பாக இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லையென மகிந்த தேசப்பிரிய போட்டியிடும் சில கட்சிகளின் பிரதிநிதிகளிடம் சொன்னதாகவும் உள்ளகத் தகவல் ஒன்று கூறுகிறது.