இது தொடர்பாக இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அரச திணைக்கங்களுக்கச் சொந்தமான நிதியிலேயே வாகனங்களுக்கான எரிபொருட்களும் நிரப்பப்படுவதாகவும் இது தொடர்பான மதிப்பீடு ஒன்றை செய்ய வேண்டுமெனவும் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் இந்த நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி.ஆகிய கட்சிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளது. இது தெடர்பாக உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அரச அதிகாரிகள் தேர்தல் பிரச்சாரங்களின்போது முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உதவியளிப்பதாக கடந்த வாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது