புதிதாக அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச்சாவடியில் வாகனங்கள் வழிமறிக்கப்பட்டுச் சோதனையிடப்படுவதாகவும் பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ள பிரதேசங்களில் திடீர் திடீரன இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளிலில் ஈடுபடுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் முறையிட்டுள்ள மக்கள், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். வடமாகாணத்தில் புதிய இராணுவச் சோதனைச்சாவடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இது புதிய இராணுவச் சோதனைச் சாவடி அல்ல என்றும் மக்களுக்காக அவ்வப்போது சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார். மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அவர் கூறியள்ளார்.