யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவனியா ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் மாத்திரம் ஆங்காங்கே சில வர்த்தக நிலையங்கள் இராணுவத்தின் அச்சுறுத்தல்களினால் திறக்கப்பட்டிருந்தன.
யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள் முற்றாகச் செயலிழந்தன. வவுனியா பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர், மூடியிருந்த வர்த்தக நிலையங்களைத் திறக்குமாறு அச்சுறுத்தியதோடு சில வர்தக நிலையங்களிற்குள்ளே சென்றும் கடைகளைத் திறக்குமாறு உத்தரவிட்டனர். ஆனாலும் சிறிய பெரிய வர்த்தக நிலையங்கள் எதுவுமே திறக்கப்படவில்லை.
யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர் ஆனாலும் அனைத்துக் கடைகளும் முடப்பட்டிருந்தன.
தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த இலங்கை ஒற்றையாட்சி அரசின் யாழ் நீமன்றம் விதித்திருந்த தடைகளுக்கு மத்தியிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றிருந்தன.
ஆனாலும் அவ்வாறு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராகவே இன்று திங்கட்கிழமை கடையடைப்புப் போராட்டம் இடம்பெற்றது. இந்தப் போராட்டம் வெற்றியென பத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அறிவித்துள்ளன.