கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட மகிந்த தேசப்பிரிய, மாகாண சபைத் தேர்தல்கள் மேலும் மேலும் தாமதமடைந்தமையினால் சட்டப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
20ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தாலும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் சட்டப்பிரச்சினை இருப்பதாகவும் ஆனாலும் நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றை சமர்பித்து நிறைவேற்றி மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியுமெனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அதேவேளை. மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியம் இல்லையெனவும் மாகாணங்களுக்கான அதிகாரப்பரவலாக்கத்துக்குரிய 13ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டுமெனவும் அமைச்சர்கள் பலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.