எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. சுதந்திர தின நிகழ்வுகளின் போது பௌத்த தேசிய கொடி ஏற்றப்பட்டிருந்தமை இதுவே முதற் தடவையாகும். கடந்த காலங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பௌத்த தேசிய கொடி ஏற்றப்பட்டிருக்கவில்லை.
அதேவேளை, இன்று மாலை நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக இருக்கும் போரில் உயிர் நீத்த படையினரின் நினைவுத் தூபிக்குச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கு அஞ்சலி செலுத்தினார்.
பௌத்த பிக்குமார் பலரும் பங்குபற்றியிருந்தனர். சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ச இலங்கை பௌத்த நாடு என்று பல தடவை கூறியிருந்தார். பௌத்த சமயத்தவனாகவே இலங்கைத் தீவை ஆட்சி செய்வேன் என்றும் கூறினார்.
இனப்பிரச்சனை இருப்பதாகவோ, அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்றோ எதுவுமே அவர் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.