மேற்படி மீனவர்கள் மூவரும் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து கொண்ணையன்குடியிருப்பைச் சேர்ந்த ராஜரெட்னம் கிறிஸ்டின் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி படகிலேயே கடற்றொழிலுக்கு சென்று வருகின்றனர் .
இந்த நிலையில் கடந்த ஞாயிறு அதிகாலை 1.30 க்கு மூவரும் ஒலைத்தொடுவாய் கடலுக்கு வழமை போன்று குறித்த படகில் மீன் பிடிக்கச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சுமார் ஐந்து நாட்கள் கடந்தும் கரை திரும்பாத இவர்களின் நிலை குறித்து தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் ஒலைத்தொடுவாய் பகுதி மீனவர்கள் இவர்களைத் தேடி வருவதாக உறவினர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.
குறித்த மீனவர்கள் மூவரும் கடலில் காணாமல்போனது குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதுடன் மன்னார் சனிவிலேஜ் கடற்படை முகாமிற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.