வட மாகாணத்தில் இயங்கும் ஒரு சில பாடசாலைகளில் வாசிகசாலைக்கான கட்டிடங்கள் மாணவர்களுக்கான விளையாட்டு மைதானங்கள் ஆகியவை இல்லாததைச் சுட்டிக் காட்டிய இவ்வதிகாரி இலங்கை அரசாங்கம் தென்னிலங்கை பாடசாலைகளில் உள்ள குறைபாடுகளை நீக்குவதில் அதீத அக்கறை காட்டும் நிலையில் வட மாகாணப் பாடசாலைகளை முற்றாகக் கைவிட்டுள்ளதாக கூர்மைத் தளத்திற்கு தெரிவித்தார்.
இதேவேளை வட மாகாண சபை இயங்கிய காலப்பகுதியில் அப்போதைய வட மாகாண கல்வி அமைச்சரும் குறித்த பாடசாலைகளில் நிலவிய குறைபாடுகள் தொடர்பில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் முழுமையான யுத்த பாதிப்பை எதிர் நோக்கிய வட மாகாணப் பாடசாலைகளில் நிலவும் பல குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டி அதை நிவர்த்தி செய்யுமாறு முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான நாடாளுமன்ற உறுப்பினர் க.வி விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என வட புல கல்வி சார் சமூகத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் மாகாணக் கல்வித் திணைக்களம் வட மாகாண பாடசாலைகளில் நிலவும் பல பௌதீக ரீதியிலான குறைபாடுகளுடன் இப் பாடசாலைகளை தொடர்ச்சியாக இயக்கி வருவதாக மேற்படி உயர் அதிகாரி கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.