ஆணைக்குழுவின் இப்பரிந்துரைக்கு எதிராக பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் பகிரங்கமாகவே கடும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், பொதுபல சேனாவை தடை செய்வதால் எந்த நன்மையும் ஏற்பட்டுவிடாது என கூறினார். பரிந்துரையின் பிரகாரம் தடை செய்வது கடினமானதெனவும் அமைச்சர் சொன்னார்.
ஆணைக்குழுவில் கூறப்பட்டுள்ளவாறு கல்வி குறித்த பரிந்துரைகளை அமுல்படுத்த முடியும். குறிப்பாக இனவாத சிந்தனைகள் பாட விதானங்களில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை நீக்க வேண்டும். மதராஸா நிலையங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டுமென ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த முடியுமென அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கூறினார்.
முஸ்லிம் மக்களின் இஸ்லாமியப் பாடவிதானங்களில் மாற்றம் செய்யும் திட்டமொன்றையே அரசாங்கம் நடைமுறைப்படுத்தலாமென எதிர்பார்க்கப்படுவதாக அவதானிகள் கூறுகின்றனர்.