எனினும் குறித்த அன்னதான மடங்களில் பக்தர்கள் அமர்ந்து உணவு அருந்துவதற்கும் அங்கு உணவு வகைகளை பரிமாறுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்களுக்கு குறித்த அன்னதான மடங்களில் உணவுகளைப் பொதி செய்து வழங்குமாறு ஆலய நிருவாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் ஆலயத்தில் நாளை வியாழன் காலை ஆரம்பிக்கப்படும் சிவராத்திரி தின அனுஷ்டானங்களில் பாலாவி தீர்த்தக்கரையில் இருந்து சிவன் ஆலயத்தை நோக்கி மேற்கொள்ளப்படும் தீர்த்தக் காவடி நிகழ்வுகளுக்கு கொரோனா தொற்றுக் காரணமாக மன்னார் சுகாதார அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வரத்தில் நடத்தப்படும் நான்கு ஜாம பூசைகளில் கலந்து கொள்வதற்கும் ஏனைய அனுஷ்டானங்களில் ஈடுபடுவதற்கும் வரையறுக்கப்பட்ட எண்ணிக் கையிலேயே பொது மக்கள் அனுமதிக்கப்படுவதுடன் ஆலய வளாகத்திலும் அவர்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மன்னார் சுகாதார திணைக்களப் பணியாளர்களும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் திருக்கேதீஸ்வர ஆலயப் பகுதிகளில் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.