கறுப்பு நிற வாகனம் ஒன்றில் தன்னைக் கடத்தி சுமார் இரண்டு மணிநேரம் விசாரணை செய்ததாகவும் சித்திரவதை தாங்க முடியாத நிலையில் தன்னிடம் இருந்த குறித்த ஒலிநாடாவை கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்ததாகவும் சுஜீவ கமகே தெரிவித்தார்.
தன்னைக் கடத்தியவர்கள் யார் என்று தனக்குத் தெரியுமெனவும் நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணையின்போது முழு விபரங்களையும் தான் வெளிப்படுத்துவேன் எனவும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரான சுஜீவ கமகே தெரிவித்தார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். ஊடகவியலாளர் சுஜீவ கமகே முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சென்ற ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான சமூகநீதி என்ற அமைப்பின் பிரதான உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, அதிகாரபூர்வமாக எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை. ஆனால் கடத்தல்காரா்களினால் விடுவிக்கப்பட்ட சுஜீவ கமகே பொலிஸாரால கைது செய்யப்பட்டு சுமார் நான்கு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.