இலங்கையில் அனைத்து இன மக்களின் ஜனரஞ்சகத்தை பெற்று சகல மதங்களுக்கிடையில் ஒற்றுமையை வலியுறுத்திய தலை சிறந்த மனித நேயச் செயல்பாட்டாளரான முன்னாள் ஆயரின் மறைவு, வடகிழக்கு மாகாணம் மட்டுமின்றி முழு இலங்கைக்கும் பெரும் இழப்பு எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, இன்றிலிருந்து இறுதி நல்லடக்கம் செய்யப்படும் திங்கட்கிழமை வரையான எதிர்வரும் மூன்று நாட்களுக்கு வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டு துக்கம் அனுஷ்டிக்குமாறும் செல்வம் அடைக்கலநாதன் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை ஆயரின் மறைவையடுத்து மன்னார் நகரில் அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் வர்த்தக நிலையங்களிலும் முக்கிய சந்திகளிலும் அஞ்சலி செலுத்தும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன். வீடுகளில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.