தங்களது வீடுகளுக்கும், தொழில் செய்யும் நிறுவனங்களுக்கும் மோட்டார் சைக்களில்கள் உள்ளிட்ட வாகனங்களில் வருவோர், தங்களைப் புலனாய்வுப் பொலிஸார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு விசாரணை செய்வதாகக் கூறியுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் மலையகப் பகுதிகளில் இயங்கும் சுயாதீனமானக் குழுக்கள், அமைப்புக்களின் தகவல்கள் திரட்டப்படுவதாகக் கூறியே தங்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பாதிக்கப்பட்டோர் தமது முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.
மலையகத்தில் இயங்கும் சில அரசியல்வாதிகளையே இவ்வாறான விசாரணைகளுக்குக் காரணம் என்றும் புலனாய்வுப் பொலிஸாருக்கு அவர்களே தகவல் வழங்குவதாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.