வைத்தியர் வருகை தாமதமடைந்தமையினால் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியர் வீட்டுக்குச் சென்றுள்ளார். வைத்தியர் பெண் என்பதனால் அவரின் கணவர் வீட்டுக்குச் சென்றவரை தாறுமாறாக திட்டித்தீர்த்துள்ளார்.
வைத்தியர் தங்குவதற்கான விடுதிவசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட போதிலும் அந்த விடுதியில் அவர் தங்காது நகர் பகுதியில் தங்குகின்றார். இதனால் வைத்தியசாலைக்கு உரிய நேரத்திற்கு அவரால் சமூகளிக்கமுடியவில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்து மக்கள் தமது மருத்து வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக மிக நீண்ட தூரம் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மருந்தகம் உரிய நேரத்தில் இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
போரினால் பாதிக்கப்பட்ட தமது பிரதேசத்திற்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் வருவதில்லை என்றும் உதவிகள் கூடச் செய்வதுமில்லை எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனால் இலங்கை இராணுவத்தின் உதவியை நாடவேண்டிய அவல நிலைமை தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் வேதனையுடன் கூா்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.