உருக்குழைந்த நிலையில் காணப்பட்ட மேற்படி சடலம் தொடர்பாக மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் ரி-3 பகுதியில் உள்ள கோவிந்தன் கடைச் சந்திக்கு அருகாமையில் உள்ள இரணைமடு நீர் வாய்க்காலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கடந்த செவ்வாய் காலை இலங்கைப் பொலிஸாரினால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் கிளிநொச்சி திருவையாறுப்பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய கே. வில்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொது வைத்தியசாலை அதிகாரியொருவர் கூர்மை செய்தி தளத்திற்கு தெரிவித்தார். மேலும் குறித்த நபர் வீதி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனமொன்றின் ஊழியர் என வைத்தியசாலை அதிகாரி மேலும் தெரிவித்தார்.
குறித்த நபர் மேற்படி நீர் வாய்க்காலில் குளிக்கும் சமயம் நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேசமயம் மன்னார் கரிசல் காட்டுப்பகுதியில் ஆணொருவரின் சடலம் அண்மையில் மீட்க்கப்பட்டது. மிகவும் பழுந்தடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த சடலத்திற்கு உரியவர் மன்னார் தோட்டவெளியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் என அடையாளம் காணப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதென மன்னார் பொது வைத்தியசாலையின் அதிகாரியொருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
குறித்த தோட்டவெளி நபர் கரிசல் காட்டின் நடுவே உறங்கியவேளை அரவம் தீண்டி மரணமடைந்துள்ளாக தெரிவிக்கபடுகிறது.