குறித்த பொருளாதார ஆணைக்குழுவில் எட்டு உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர் எனவும் அந்த எட்டு உறுப்பினர்களும் சீன அதிகாரிகளாகவே இருப்பர் என்றும் சட்டமூலத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் நியமனத்தை இலங்கை ஜனாதிபதியே மேற்கொள்வார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் ஆகியோர் குறித்த பொருளாதார ஆணைக்குழுவில் உறுப்பினராக அங்கம் வகிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும் அதனை அரசாங்கம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உயர்மட்டப் பிரதிநிதிகள் இந்த பொருளாதார ஆணைக்குழவில் இடம்பெறத் தவறியமை ஆபத்தானதென்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா நாடாளுமன்ற விவாதத்தில் கூறியிருந்தார்.