வழைச்சேனை கிரான் கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வை நடத்திய குற்றச்சாட்டில் ஏற்பாட்டாளரான குருசுமுத்து வி.லவக்குமார் என்ற குடும்பஸ்தரும் மற்றும் இரு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கல்குடா பொலிஸாரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர்.
வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற உத்தரவுடன் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்தப் பத்துப்பேரும் மீண்டும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது இவர்களை மேலும் விசாரிக்கக் கால அவகாசம் தேவையெனப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். இதனால் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை தடுத்து வைக்குமாறும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்லைப்படுத்தும்போது குற்றங்கள் நிரூபிக்கப்பட வேண்டுமெனவும் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுகள் மூலம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை இலங்கை அரசாங்கம் தடுக்க முற்பட்டபோதும், வடக்குக் கிழக்கில் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
கிழக்கு மாகாணத்தில் இலங்கைப் பொலிஸாரும் இலங்கை இராணுவத்தினரும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.