படிவங்களை ஒரு மணி நேரத்தில் பூர்த்தி செய்து பொலிஸ் நிலையத்தில் கையளிக்குமாறு பொலிஸார் கூறியுள்ளனர். முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் வசிக்கும் கிராமவாசி ஒருவர் மூலமாகப் படிவங்களைப் பொலிஸார் வழங்கியதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இந்தப் படிவங்கள் தொடர்பாக முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள கிராம சேவகர்களுக்கு எதுவும் தெரியாதெனவும் மக்கள் கூறுகின்றனர்.
சிவில் நடவடிக்கைகளின்போது கிராம சேவகர்களின் ஒத்துழைப்பைப் பொலிஸார் பெற வேண்டுமெனவும் ஆனால் அவ்வாறான நடவடிக்கைகள் எதுவுமேயின்றி பிரதேசவாசி ஒருவர் மூலமாகப் படிவங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கைப் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76 ஆவது பிரிவிற்கு அமைவாகச் செய்யப்படும் ஆணை என்று அந்த படிவத்தில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிடப்பட்டுள்ளது.