13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகப் பேசியதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் கூறியுள்ளது. வடக்குக் கிழக்குப் பிரதேசங்களின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாகவும் உரையாடியுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியா ஆதரவு வழங்குமென இந்தியத் தூதுவர் உறுதியளித்ததாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்தியத் தூதுவர் இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழ் மக்கள் தும்புத் தடியாலும்கூடத் தொட்டுப் பார்க்க மாட்டார்கள் என்று சம்பந்தன் ஏலவே கூறியிரு்ந்தமை குறிப்பிடத்தக்கது.