சபாநாயகர் சபைக்குள் வரும் சபா மண்டப வாசலுக்கு அருகாக இருக்கும் ஆசனம் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலரின் ஆதரவு கிடைக்குமென கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கூறியுள்ளார்.
அடுத்து வரும் மாதங்களில் சுமார் 60 உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்பாரெனவும் அவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளர்.
அதேவேளை, சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக இருப்பாரெனவும் மீண்டுமொருமுறை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்டுச் சபாநாயகரிடம் நம்பிக்கை தெரிவிப்பார்கள் எனவும் ஹர்சாடி சில்வா தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தவொரு ஆசனத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி பெறவில்லை. ஆனாலும் கட்சிக்குக் கிடைத்த மொத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப் பட்டியல் ஒன்று இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டது.
அந்த இடத்திற்கே ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பரிந்துரைத்தது.