முன்னைய காலங்களில் பிரதமராகவோ அல்லது எதிர்க்கட்சித் தலைவராகவோ பதவியேற்கும்போது கொழும்பு கங்காராமய மற்றும் கொள்ளுப்பிட்டி வாலுகாராமய விகாரைகளுக்கே ரணில் விக்கிரமசிங்க செல்வது வழமை.
ஆனால் இம்முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கும் முன்னர் ராஜபக்ச குடும்பத்தை ஆட்சிக்கு அமர்த்தப் பெரிதும் பாடுபட்ட கொழும்பு அபயராமய விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்து ஆசிபெற்றிருக்கிறார்.
முத்தெட்டுவே ஆனந்த தேரர் சமீபகாலமாக கோட்டாபய ராஜபக்சவை விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க பதவியேற்க முன்னர் சஜித் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
ஆனால் இந்த எதிர்ப்பு நடவடிக்கை ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பதற்கு எதிராகவே என்று அமைச்சர்கள் பலரும் குற்றம் சுமத்தினர்.