தடுப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் உதவிகள் தொடர்பாகவும் அரசாங்கத்துடன் பேசியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கை முழுவதிலும் பணியாற்றுகின்ற சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளதாகவும் விரைவில் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
புதிய பிறழ்வுகள் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதால், அதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்போது ஏனைய பிறழ்வுகளைக் காட்டிலும் துரிதமாக பரவக்கூடும் என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டி்காட்டினார்.
இதேவேளை, இலங்கையில் டெல்டா கொவிட் பிறழ்வுடன் ஐவர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.