அத்துடன் வீதிப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அந்த நபரின் புகைப் படத்தையும் சுமந்திரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். ஆனாலும் சுமந்திரன் முன் வைத்த குற்றச்சாட்டு ஆதாரபூர்வமற்றதென சீனத் தூதரகத்தினால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தனது அதிகாரபூர்வ ருவிட்டர் தளத்தில் சுமந்திரனின் பதிவு தவறானதெனச் சுட்டிக்காட்டியுள்ளது. சீனப் பிரஜை என்று சுமந்திரனால் அடையாளப்படுத்தப்பட்ட நபர் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் ஹனிபா என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் சுமந்திரன் சமூக வலைத்தளத்தில் உள்ள தனது பதிவை நீக்கியுள்ளார். அத்துடன் தனது பதிவு தவறானது என்றும், அதற்காக வருந்துவதாகவும் அவர் தனது புதிய பதிவில் கூறியுள்ளார்.
ஆனாலும் வடக்குக் கிழக்கில் பணியாற்றுவதாகக் கூறப்படும் சீனப் பிரஜைகள் பற்றிய விபரங்களை வெளியிடவுள்ளதாகவும் அந்தப் பதிவில் சுமந்திரன் கூறியுள்ளார்.