திஸ்ஸமகாராம வாவி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த சீன பிரஜைகள் அணிந்திருந்தது இராணுவ சீருடை அல்ல என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறுகின்றார். இலங்கை மக்கள் பார்வையற்றவர்கள் என்று கருதியே கெகலிய ரம்புக்வெல இவ்வாறு கூறுகிறாரா என்று துஷார இந்துனில் கேள்வி எழுப்பினார்.
திஸ்ஸமகாராம வாவியில் இடம்பெறும் அபிவிருத்தி பணிகள் முற்றிலும் தொல்பொருளியல் கட்டளை சட்டத்திற்கு முரணானது. தொல்பொருள் முக்கியத்துவம் உள்ள இடங்களில் சீனர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது ஆபத்தானதென்றும் துஷார இந்துனில் கூறியுள்ளார்.
இதேவேளை, சீன இராணுவ உடை தொடர்பாகத் தெளிவுபடுத்த வேண்டுமென ஜே.வி.பி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லையென ஜே.வி.பி உறுப்பினர் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார்.