குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் நிறுத்தப்படுவார்கள் என்றும் அரசியல் செல்லாக்கைப் பிரயோகிக்க முடியாதெனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுமி உயிரிழந்தமை குறித்த விசாரணையில் றிஷாட் பதியுதீனும் ச்ந்தேக நபராகச் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர்கள் நாளை மறுதினம் புதன்கிழமை புதுக்கடை நீதவான் நீதிதன்றத்தில் முன்விலைப்படுத்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, றஷாட் பதியுதீனின் கொழும்பு இல்லத்துக்குக் கூடுதலான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வீட்டில் தற்போது எவரும் இல்லாத நிலையில் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டம் டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான தமிழ் சிறுமி எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.