சிறுமியின் மரணம் தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் சிறுமியின் சடலத்தை அடக்கம் செய்யப்பட்ட மயானத்தில் இருந்து மீண்டும் எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
இதனால், சிறுமி அடக்கம் செய்யப்பட்டுள்ள டயகம பொது மயானத்திற்குக் கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து டயகமவுக்குச் சென்ற சிறப்புப் பொலிஸ் குழு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அத்துடன் உடனடியாக மருத்துவப் பிரிசோதனை செய்வதற்காக சிறப்பு மருத்துவர் குழு ஒன்றும் டயகமவுக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதேவேளை, றிஷாட் பதியுதீனின் கொழும்பு இல்லத்தில் ஏற்கனவே பணியாற்றிய பத்துப் பெண்களில் ஐந்துபேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் ஏனைய பெண்களிடமும் வாக்குமூலம் பெறப்படுமெனவும் இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண கொழும்பில் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.