ஆனாலும் எரியுண்ட நிலையில் சிறுமி உயிரிழந்தமை தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்வதற்காகவே நீதிமன்ற உத்தரவில் சடலம் அடக்கம் செய்யப்பட்ட மயானத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
இச்சிறுமியின் இறப்புக்குப் பின் அவரது உடல் கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பிரேதப் பெட்டி முற்றாக மூடப்பட்ட நிலையில் சிறுமியின் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பாகப் பெற்றோர் சிறுவர் உரிமை பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதற்கமைய கொழும்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சிறுமியின் சடலத்தை இரண்டாவது முறையாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென கோரியிருந்தனர். இதனால் சடலத்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மயானத்தில் இருந்து எடுக்கப்பட்ட சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் கண்டி பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. நுவரெலியா மாவட்ட நீதிபதி, சட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொலிஸார் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.