வைத்தியர் சங்கம் கூறுவதைக் கேட்டு முழு நாட்டையும் முடக்கி அல்லது முழுமையான ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து மக்களை வீட்டில் அமர்த்தி, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் தேரர் கோரியுள்ளார்.
தடுப்பூசிகளை வீடுகளுக்குச் சென்று வழங்க வேண்டுமேனவும் தேரர் வலியுறுத்தினார். எதிர்பார்த்தைப் போன்று இந்த அரசாங்கம் செயற்படவில்லை எனவும், புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தேரர் கூறினார்.
இதேவேளை, கொவிட் நோய்த் தாக்கத்தினால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலமைகள் தொடர்பாக அனைத்து பௌத்த அமைப்புகளும் விரைவில் ஒன்றுகூடி கலந்துரையாடவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாத்திரம் 124 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் இன்று புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.