இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதியாக

கோட்டாபய ராஜபக்சவைப் பதவியில் அமர்த்திய ஆனந்த தேரர் ஆட்சி மாற்றத்தைக் கோருகிறார்

ஏனைய பௌத்த அமைப்புகளும் ஒன்றுகூடிப் பேசவுள்ளன
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 11 23:06
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 15 21:31
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்குப் பாடுபட்டவரும் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர், ஆட்சி மாற்றம் அவசியமென வலியுறுத்தியுள்ளார். இலங்கை மக்கள் ராஜபக்சவின் ஆட்சியின் வெறுப்படைந்துள்ளதால், ஆட்சி விரைவில் கவிழ்க்கப்படுமென்றும் தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராஜபக்ச குடும்பத்தைக் கடுமையாக விமர்சித்த முருத்தெட்வே ஆனந்த தேரர், அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாகவும் கண்டித்தார்.
 
வைத்தியர் சங்கம் கூறுவதைக் கேட்டு முழு நாட்டையும் முடக்கி அல்லது முழுமையான ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து மக்களை வீட்டில் அமர்த்தி, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் தேரர் கோரியுள்ளார்.

தடுப்பூசிகளை வீடுகளுக்குச் சென்று வழங்க வேண்டுமேனவும் தேரர் வலியுறுத்தினார். எதிர்பார்த்தைப் போன்று இந்த அரசாங்கம் செயற்படவில்லை எனவும், புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தேரர் கூறினார்.

இதேவேளை, கொவிட் நோய்த் தாக்கத்தினால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலமைகள் தொடர்பாக அனைத்து பௌத்த அமைப்புகளும் விரைவில் ஒன்றுகூடி கலந்துரையாடவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாத்திரம் 124 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் இன்று புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.