கொவிட் தொற்றுத் தொடர்பாக தற்போதைய நிலையில், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடியாதெனவும், ஆகவே அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்தி அவசர நிலமைகள் குறித்து ஆராய வேண்டுமெனவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
இந்த மாநாட்டின் மூலம் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை அரசியல் கட்சிகளுக்கு தெளிவுபடுத்த முடியுமெனவும், கட்சிகளின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று அனைவரின் பங்கேற்புடன் தொற்றுநோய்ப் பரவலைத் தடுக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டுமெனவும் உரிய தரப்புடன் கட்சி அரசியல் வேறுபாடுகளின்றி செயற்பட வேண்டுமெனவும் மக்களைப் பாதுகாப்பது மாத்திரமே உடனடித் தேவையெனவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.