இலங்கைத்தீவில்

வேகமாகப் பரவும் கொவிட் 19- இயல்பாகவே முடங்கிய கொழும்பு

24 மணி நேரத்தில் 171 பேர் உயிரிழப்பு
பதிப்பு: 2021 ஓகஸ்ட் 17 21:40
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 18 23:18
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத்தீவில் கொவிட் நோய்ப்பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் தாங்களாகவே வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். பொது முடக்கம் இல்லாதபோதும் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது. கோட்டை. புறக்கோட்டை வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்துச் சேவைகளும் செயலிழந்துள்ளன. நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு வரையான 24 மணி நேரத்தில் கொவிட் தொற்றால் 171 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
இதனால் பதற்றத்துக்குள்ளான மக்கள் வெளியில் செல்வதைத் தாங்களாகவே தவிர்த்துக் கொண்டனர். இதேவேளை, முழுமையான ஊரடங்குச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு இலங்கை மருத்துவர் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பு நகருக்குள் வருவதை முற்றாகத் தவிர்க்குமாறு கொழும்பு மாநகர சபை முதல்வர் ரோசி சேனநாயக்கா வெளி மாவட்ட மக்களிடம் அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு, கம்பகா ஆகிய மாவட்டங்களில் கொவிட் நோய் வேகமாகப் பரவுகின்றது.

இதுவரை ஆறாயிரத்து 434 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.