இதனால் பதற்றத்துக்குள்ளான மக்கள் வெளியில் செல்வதைத் தாங்களாகவே தவிர்த்துக் கொண்டனர். இதேவேளை, முழுமையான ஊரடங்குச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு இலங்கை மருத்துவர் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொழும்பு நகருக்குள் வருவதை முற்றாகத் தவிர்க்குமாறு கொழும்பு மாநகர சபை முதல்வர் ரோசி சேனநாயக்கா வெளி மாவட்ட மக்களிடம் அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு, கம்பகா ஆகிய மாவட்டங்களில் கொவிட் நோய் வேகமாகப் பரவுகின்றது.
இதுவரை ஆறாயிரத்து 434 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.