அவரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. கொவிட் நோய்த் தொற்றைத் தேசிய பேரிடர் என்று பிரகடனப்படுத்த வேண்டுமெனவும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லையெனவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்சா டி சில்வா கூறியுள்ளார்.
அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியமை தொடர்பாக அரசாங்கத் தரப்பு அங்கத்துவக் கட்சி உறுப்பினர்கள் சிலரும் விசனம் வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்பதை நாடாளுமன்ற விவாதத்தில் ஆராயவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெகலிய ரம்புக்வெல இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டம் அமுலில் இருப்பதால். ஜனாதிபதியின் அதிகாரம் மேலோங்குமென ஜே.வி.பி எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.