இந்த வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதித் திருத்தச் சட்டத்தின் மூலம் கறுப்புப் பணத்தை வைத்திருப்போர் அதனை வங்கியில் செலுத்தி வட்டிவீதங்களைப் பெறக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிதித் திருத்தச் சட்டத்தை தமக்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்தும் நோக்கிலேயே அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் கர்சன ராஜகருணா குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், மத்திய வங்கி ஆளுநரின் பதவி விலகல் அறிவிப்புக்குப் பின்னால் அழுத்தங்கள் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜே.வி.பியும் சந்தேகம் வெளியிட்டுள்ளது.