பொதுநலவாய பொதுச் செயலாளர் பட்ரிசியா ஸ்கொட்லேன்ட்டுடன் இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜெனீவா மனித உரிமைச் சபை மற்றும் பொதுநலவாய நாடுகளுடன் இணைந்து செயற்படும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்திய அமைச்சர் பீரிஸ், பொதுநலவாய நாடுகளின் குறிக்கோள்களுக்கு ஏற்ப அர்பணிப்போடு இலங்கை செயற்படுவதாகவும் கூறினார்.
இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாகவும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் நீண்ட விளக்கமளித்துள்ளார். இந்த இணைய வழி உரையாடல் தொடர்பாக வெளியுறவு அமைச்சு இன்று திங்கட்கிழமை கொழும்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.