அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர், தலைமையிலான பங்காளிகளே, எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று செவ்வாய்க்கிழமை இரவு கூடி ஆராய்ந்துள்ளது. அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்வதற்காக இணக்கம் தெரிவித்தமை தொடர்பாக அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென மைத்திரிபால சிறிசேன கூட்டத்தில் கூறியதாகக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கெரவலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள மின்நிலையத்தின் 40 சதவீதத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு கைமாற்றுவதற்கான ஆரம்ப உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட்டிருப்பதாகப் பங்காளிக் கட்சிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
தமிழ்பேசும் மக்களின் தாயகமான திருகோணமலைத் துறைமுகத்தை அண்டிய முப்பத்து மூன்று ஏக்கர் காணியை அமெரிக்காவுக்குக் குத்தகைக்குக் கொடுத்துள்ளதாக தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் சமீபத்தில் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.