பிசிஆர்பரிசோதனைகள் குறைக்கப்பட்டதால் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவடைந்ததாகவும் பரிசோதனைகள் மேலும் அதிகரிக்கப்பட்டால் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமெனவும் இலங்கை மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் நோய்த் தொற்றின் தாக்கம் சற்றுக் குறைவடைந்துள்ளதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைவடைய ஆரம்பித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரட்ன தெரிவித்துள்ளார்.
நேற்றுப் புதன்கிழமை நள்ளிரவு வரையான 24 மணிநேரத்தில் 72 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத் திணைக்களம் இன்று வியாழக்கிழமை இரவு அறிவித்துள்ளது.