ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் எவ்வாறு செயற்படுவது என்ற புதிய விதிமுறைகள் அடுத்த 48 மணி நேரத்தில் வெளியிடப்படுமெனவும் அதன் பிரகாரமே அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்க முடியுமெனவும் சவேந்திர சில்வா கூறினார்.
இதேவேளை, இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தியவர்கள் மாத்திரமே அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்ற முடியுமெனவும் தடுப்பூசிச் சான்றிதழ்கள் இல்லாமல் எவரும் பொது இடங்களுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் செல்ல முடியாதெனத் தடையுத்தரவு பிறப்பிக்கப்படலாமென அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை 24 மணி நேரத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கைச் சுகாதார சுகாதார அமைச்சு இன்று திங்கட்கிழமை இரவு அறிவித்துள்ளது.