இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபயசிங்கவும் ராஜபக்ச குடும்பத்தின் மீது குற்றம் சுமத்தியுதுடன் நிருபமா ராஜபக்ச வைப்பிலிட்டுள்ள பணத்தின் விபரங்கள் அனைத்தும் வெளிப்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய பிரதமர் மகிந்த ஆகியோருக்குத் தெரியாமல் நிருபமா ராஜபக்சவினால் இவ்வளவு பணத்தையும் இலங்கைக்கு வெளியே கொண்டு சென்றிருக்க முடியாதெக ராஜித சேனாரட்ன கூறினார்.
ராஜபக்ச குடும்பத்துக்கு ஆதரவான மேலும் 65 பேருடைய சொத்துக்கள் பற்றிய விபரங்களும் விரைவில் வெளிவருமெனவும் ராஜித சேனாரட்ன கூறினார். விசாரணை செய்வதற்காக கோட்டாபய ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவில் நம்பிக்கை இல்லையென அசோக அபயசிங்க தெரிவித்தார்.