முஸ்லிம் மக்களின் பிரதேசங்களுக்குச் சென்று ஞானசார தேரர் இனவாதமாகப் பேசுவதாகவும் இது பௌத்த நாடெனவும் கூறி வருவதாக இம்ரான் மகுறூப் கூறினார்.
இந்த விவாதத்தில் உரையாற்றிய சரத் பொன்சேகா. மற்றுமொரு இனக்கலவரத்துக்கு அரசாங்கம் தூபமிடுவதாகக் குற்றம் சுமத்தினார். அமைச்சர்கள் சிலரும் பெறுப்பற்ற முறையில் பேசி தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்குவதாகவும் முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா கூறினார்.
ஜே.வி.பி உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்காவும் அரசாங்கத்தின் இனவாதச் செயற்பாடுகளைக் கண்டித்தார்;. ஞானசார தேரர் பொலிஸாரின் பாதுகாப்புடன் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரதேசங்களுக்குச் சென்று வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.